Published : 04 Oct 2018 11:45 AM
Last Updated : 04 Oct 2018 11:45 AM

"தனுஸ்ரீயை கிண்டல் செய்பவர்கள் தங்களை நினைத்து அவமானப்பட்டுக் கொள்ள வேண்டும்"

தனுஸ்ரீ தத்தாவை கிண்டல் செய்பவர்கள் தங்களை நினைத்து அவமானப்பட்டுக் கொள்ள வேண்டும் என்று பிரபல பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா தெரிவித்துள்ளார்.

கடந்த 2008-ல் ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ இந்தி திரைப்படத்துக்கான பாடல் காட்சி ஒத்திகையின்போது, நடிகர் நானா படேகர் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என நடிகை தனுஸ்ரீ  தத்தா அண்மையில் பரபரப்பு புகார் கூறினார். பாலியல் தொந்தரவை தொடர்ந்து படப் பிடிப்பு தளத்தை விட்டு வெளி யேறிய தன்னை அரசியல் கட்சி குண்டர்கள் மூலம் நானா படேகர் மிரட்டினார் என்றும் தனுஸ்ரீ  தத்தா கூறினார். இதற்கு எதிராக நானா படேகர் தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த விவகாரத்தில் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, டுவிங்கிள் கன்னா உட்பட பாலிவுட் பிரபலங்கள் பலர் தனுஸ்ரீ தத்தா வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

எனினும் தனுஸ்ரீ தத்தா பத்து ஆண்டுகள் கழித்து இந்த விமர்சனத்தை வைத்திருப்பது குறித்து  பலரும் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த விமர்சனங்கள் குறித்து விக்கி டோனர் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா கூறும்போது, "தனுஸ்ரீயை கிண்டல் செய்பவர்கள் தங்களை நினைத்து அவமானப்பட்டுக் கொள்ள வேண்டும். அவருக்கு புகார் அளிக்க அனைத்து உரிமையும் உண்டு. அவர் எப்போது வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம்" என்று கூறியுள்ளார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x