Published : 22 Feb 2019 11:01 AM
Last Updated : 22 Feb 2019 11:01 AM

ஏற்றுமதி வாய்ப்புகளை ஆராய வேண்டும்: ராணுவ தளவாட நிறுவனங்களுக்கு நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்

ராணுவ தளவாடங்களைத் தயாரிக் கும் அரசு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை பிற நாடுகளுக்கு விற்பதற்கான சந்தை வாய்ப்புகளை ஆராய வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

பனாஜியில் உள்ள வாஸ்கோ டவுன் பகுதியில் கடலோர காவல் படைக்கான ரோந்து கப்பல் (ஓபிவி) சேவையை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது;

அரசு நிறுவனமான கோவா ஷிப்யார்டு (கப்பல் கட்டும் நிறுவனம்) மட்டுமல்ல அனைத்து அரசு நிறுவனங்களும் சர்வதேச தரத்துக்கு தங்களது தயாரிப்புகளை உயர்த்த வேண்டும். அதேபோல இந்திய ராணுவத்துக்கு மட்டுமே தயாரித்து அளிக்காமல் பிற நாடுகளில் உள்ள சந்தை வாய்ப்பு களையும் ஆராய வேண்டும். அப்போதுதான் சர்வதேச அளவில் அரசு நிறுவனங்களால் போட்டி யிடும் அளவுக்கு தகுதியை உயர்த்திக் கொள்ள முடியும்.

சர்வதேச அளவில் இந்தியாவில் தயாராகும் இதுபோன்ற கடலோர காவல் பணிக்கான (ஓபிவி) கப்பல்களுக்கான தேவை அதிகம் உள்ளது. பல நாடுகளும் இந்திய தயாரிப்புகளை வாங்க ஆர்வமாக உள்ளன.

ராணுவ தளவாட தயாரிப்பு நிறுவனங்களின் நிர்வாகத்தினர், அதில் உள்ள நிபுணர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து இந்தத் தயாரிப்பு களுக்கு எங்கெல்லாம் சந்தை உள்ளது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப தயாரிக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். உங்களது தயாரிப்புகளை அவர்கள் பாராட்டுகிறார்கள் என்றால், உங்கள் தயாரிப்புக்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்ல, அதற்கான சந்தைப்படுத்தலில் பாதி வேலை முடிந்த மாதிரி. அடுத்து உங்கள் தயாரிப்பை வாங்க விரும்பும் நாடுகளுடன் பேச்சு நடத்த வேண்டும்.

உங்கள் தயாரிப்புகள் மீது உங்களுக்கு முழுமையான நம்பிக்கை வர வேண்டும். அதன் பிறகு அதை சந்தைப்படுத்துவதை அரசு பார்த்துக் கொள்ளும். இந்தியாவுக்கு மட்டுமின்றி கூடுதலாகத் தயாரிக்கும் திறமை அரசு நிறுவனங்களுக்கு உண்டு என்று குறிப்பிட்ட அவர் சர்வதேச அளவில் தயாரிப்புகளை விற்பதற் கான நடவடிக்கைகளுக்கு அரசு துணை நிற்கும்.

பிரதமர் மோடி அறிவித்த மேக் இன் இந்தியா திட்டத்தில் பொருட்களை இந்தியாவில் தயாரிப்பது மட்டுமல்ல. அவற்றை ஏற்றுமதியும் செய்ய வேண்டும் என்றார்.

புதிய ரோந்துக் கப்பல் ஐஎஸ்ஏ-வானது புதிய தலைமுறையைச் சேர்ந்ததாகும். இதில் நவீன அம்சங்கள், உணர் கருவிகள் ஆகியன உள்ளன. இதில் சிறிய ரக ஹெலிகாப்டர்கள் இறங்கி, ஏறும் வசதி உள்ளது. இரண்டு ஆண்டுகளில் இந்த கப்பல் கட்டி முடிக்கப்பட்டதாக கோவா கப்பல் கட்டும் தளத்தின் தலைவர் கமடோர் பிபி நக்பால் தெரிவித்தார்.

-பிடிஐ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x