Published : 20 Feb 2019 10:40 AM
Last Updated : 20 Feb 2019 10:40 AM
ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா, ஐரோப்பிய யூனியனில் செயல்பட்டு வரும் தனது ஆலையை மூடிவிட முடிவு செய்துள்ளது.
இங்கிலாந்தின் ஸ்வின்டோன் எனுமிடத்தில் 30 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த ஆலையை 2021-ல் மூடிவிடப் போவதாக ஹோண்டா அறிவித்துள்ளது. இந்த ஆலையில் 3,500 பேர் பணி புரிகின்றனர். இந்த ஆலை ஆண்டுக்கு 1.5 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இங்கு உற்பத்தியாகும் கார்கள் 70 நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இங்கு ஹோண்டா சிவிக் கார்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதேபோல துருக்கியில் செயல்படும் ஆலையையும் மூட முடிவு செய்துள்ளது ஹோண்டா. துருக்கி ஆலை ஆண்டுக்கு 38 ஆயிரம் கார்களை உற்பத்தி செய்யும்திறன் கொண்டது.
ஏற்கெனவே நிசான் நிறுவனம் எக்ஸ் டிரெய்ல் எனும் எஸ்யுவி உற்பத்தி செய்யும் முடிவை கைவிட்டுவிட்டது. பிரெக்ஸிட் காரணமாக இந்தமுடிவை எடுத்ததாக நிசான் அறிவித்துள்ளது. பிஎம்டபிள்யூ நிறுவனம் பிரெக்ஸிட்டுக்குப் பிறகு தனது மினி கார் உற்பத்தியை ஒரு மாதம் நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் மார்ச் 29-ல் வெளியேறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT