Published : 16 Dec 2018 08:48 AM
Last Updated : 16 Dec 2018 08:48 AM

பேபி பவுடரில் கல்நார் சர்ச்சை; ஜான்சன் & ஜான்சன் பங்குகள் விலை 11% சரிவு

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத் தின் பேபி பவுடரில் புற்றுநோயை உண்டாக்கும் கல்நார் உள்ளது என்ற தகவல் வெளியானதன் காரணமாக நிறுவனத்தின் பங்கு களின் மதிப்பு 4500 கோடி டாலர் சரிந்துள்ளது. ஜான்சன் ஜான்சன் நிறுவனம் குழந்தைகளுக்கான பவுடர், சோப் உள்ளிட்ட பல் வேறு பொருள்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

இந்தநிலையில், இந்நிறுவனத்தின் பேபி பவுடரில் கர்ப்பப்பையில் புற்றுநோயை உண்டாக்கும் கல்நார் பல ஆண்டுகளாக கலந்துள்ளதாக தகவல் வெளி யானது. இதனால், ஏற்பட்ட சர்ச்சையில் நியூயார்க் பங்குச்சந்தையில் இந்நிறுவனத் தின் பங்குகளின் மதிப்பு நேற்று மட்டும் 4500 கோடி டாலர் குறைந்தது. மேலும், நிறுவனத்தின் பங்குகளின் விலையும் 11 சதவீதம் சரிந்தது. இந்நிறுவனம், இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு வழக்குகளை எதிர் கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x