Published : 14 Dec 2018 07:53 AM
Last Updated : 14 Dec 2018 07:53 AM

ரூ.4 ஆயிரம் கோடி முதலீட்டில் புதிய ஆலை: விவோ திட்டம்

சீனாவைச் சேர்ந்த விவோ நிறுவனம் இந்தியாவில் புதிய தொழிற்சாலை அமைக்க ரூ.4 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

விவோ செல்போன் விற்பனை யில் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனத்திற்கு கிரேட்டர் நொய்டாவில் தொழிற்சாலை உள் ளது. இங்கிருந்துதான் நாடு முழு வதும் செல்போன்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிறுவன செல்போன்களுக்கு சந்தையில் சிறப்பான வரவேற்பு உள்ளதை தொடர்ந்து, உத்தரபிரதேச மாநிலம் யமுனா எக்ஸ்பிரஸ்வே பகுதியில் புதிய தொழிற்சாலை அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக வரும் நான்கு ஆண்டுகளில் ரூ.4 ஆயிரம் கோடி முதலீடு மேற் கொள்ளப்படும் என்று தெரிவித் துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. -ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x