Published : 10 Dec 2018 08:54 AM
Last Updated : 10 Dec 2018 08:54 AM
விஜய் மல்லையாவை இந்தியா கொண்டுவருவதற்கான வழக்கில் இன்று இறுதி தீர்ப்பு வெளியாகிறது.
இந்திய வங்கிகளில் கிங்ஃபிஷர் நிறுவன தொழிலதிபர் மல்லையா ரூ. 9,000 கோடி கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல் லண் டன் தப்பிவிட்டார். அமலாக்கத் துறையும் சிபிஐயும் அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரு டைய சொத்துக்களை முடக்கியது.
விஜய் மல்லையாவை இந்தியா கொண்டுவருவதற்கான வழக்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. .
இந்த வழக்கில், டிசம்பர் 10ம் தேதி இறுதி தீர்ப்பு என அறிவிக்கப்பட்டது.
இறுதித் தீர்ப்பு நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் திடீ ரென்று தான் வாங்கிய கடனை 100 சதவீதம் வட்டியில்லாமல் திருப்பித் தருவதாகவும், அரசும் வங்கிகளும் தயவு செய்து இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.விஜய் மல்லையாவை இந்தியா அனுப்புவதற்கு எந்தத் தடையுமில்லை என்று தீர்ப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தெரிகிறது.
இன்று இறுதி தீர்ப்பு வரவுள்ள நிலையில், எந்த நேரமும் அவர் இந்தியா திரும்புவதற்கு வாய்ப்பிருப்பதாகச் சொல்லப் படுகிறது. அதேநேரம், தீர்ப்பை எதிர்த்து ஐரோப்பிய நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT