Published : 08 Dec 2018 07:06 PM
Last Updated : 08 Dec 2018 07:06 PM

தாய்நாட்டுக்கு அதிக பணம் அனுப்பி இந்தியர்கள் சாதனை: ரூ. 6 லட்சம் கோடி

தாய்நாட்டுக்கு பணம் அனுப்புவுதில் இந்த ஆண்டும் முதலிடம் பிடித்து இந்தியர்கள் சாதனை படைக்கின்றனர். 2018-ம் ஆண்டில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பும் தொகை சுமார் 6 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.

தொடர்ந்து பல ஆண்டுகளாகவே வெளிநாடுகளில் தங்கி பணம் சம்பாதிக்கும் சொந்து நாட்டுக்கு அனுப்புவதில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தல் உள்ளது. பல்வேறு நாடுகளில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள், தங்கள் குடும்பத்தினருக்கு 6 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து சீனா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் சீனர்கள், 4 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில், பிலிப்பைன்ஸ், மெக்சிகோ, நைஜீரியா நாடுகள் உள்ளன.

வளரும் நாடுகளில், தெற்காசியா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வடக்கு ஆப்ரிக்க நாடுகள், அதிக அளவில், வெளிநாடுகளில் வேலைபார்க்கும் தங்கள் நாட்டினர் மூலம் ஏராளமான பணத்தை பெற்றுள்ளன. வளரும் நாடுகளில் இருந்து ஏராளமானோர் குடியேறும் நாடாக, அமெரிக்கா விளங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x