Published : 07 Dec 2018 09:41 AM
Last Updated : 07 Dec 2018 09:41 AM
அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியா வில் உள்ள 10 நகரங்கள் அதி வேகமான பொருளாதார வளர்ச் சியை அடையும் நகரங்களாக அடை யாளம் காணப்பட்டுள்ளன. இந்தி யாவில் சென்னை உள்ளிட்ட 10 நகரங்கள் இந்தப் பட்டியலில் உள்ளன.
வைர நகை தொழிலில் முன்னணியில் உள்ள சூரத் நகரம் ஆண்டுக்கு 9 சதவீத வளர்ச்சி யுடன் இப்பட்டியலில் முதல் இடத் தில் உள்ளதாக சர்வதேச நகரங் களின் வளர்ச்சி குறித்து ஆய்வு நடத்திய ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக குழுவின் தலைவர் ரிச்சர்ட் ஹோல்ட் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஆக்ரா (8.58%), பெங்களூரு (8.5%), ஹைதராபாத் (8.47%), நாக்பூ (8.41%), திருப்பூர் (8.36%), ராஜ்கோஜ் (8.33%), திருச்சி (8.29%), சென்னை (8.17%), விஜய வாடா (8.16%) ஆகிய நகரங்களும் இப்பட்டியலில் உள்ளன.
இந்திய நகரங்களில் பிற நகரங்களின் பொருளாதார வளர்ச் சியானது, உலகின் பெரு நகரங் களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை விட அதிகமாக உள்ளதாகவும், ஆசிய பிராந்தியத்தில் உள்ள நகரங்களை விட அதிகமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதிகமான பங்களிப்பு
மேலும் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நகரங்களின் வளர்ச்சி 2027-ல் எட்டப்பட வேண்டிய வளர்ச்சியை இப்போதே எட்டிவிட்டதாகவும் 2035-ம் ஆண்டில் இவை 17 சதவீத அளவுக்கு வளர்ச்சியை எட்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சீன நகரங்களின் பங்களிப்பை விட இவை அதிகமாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது உலகின் பெரு நகரங்களாக உள்ளவை 2035-ம் ஆண்டில் சிறிதளவு மாற்றத்தை எதிர்கொள்ளும்.
நியூயார்க், டோக்கியோ, லாஸ் ஏஞ்சலீஸ், லண்டன் உள்ளிட்ட நகரங்கள் மற்றும் ஷாங்காய், பெய்ஜிங் உள்ளிட்டவற்றில் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ் வர். இவற்றின் மக்கள் தொகை பாரீஸ், சிகாகோ, குவான்ஸு, ஷென்ஜென் ஆகிய பகுதிகளை விட அதிகமாக இருக்கும்.
விரைவான வளர்ச்சியடையும் ஆப்பிரிக்க நாடுகள் பட்டியலில் டான்சானிய துறைமுக நக ரான டாரெஸ் சலாம் கண்டறியப் பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஆர் மீனிய தலைநகர் யெரவான் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள் ளது. வட அமெரிக்காவில் சிலிக் கான் பள்ளத்தாக்கு மிகச் சிறப்பாக செயல்படும் பகுதியாகத் திகழும் என குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT