Published : 06 Dec 2018 08:51 AM
Last Updated : 06 Dec 2018 08:51 AM

ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி 

நேற்று நடந்த ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதத்தில் எந்த மாற்ற மும் இல்லை என முடிவு எடுக்கப் பட்டுள்ளது. எனவே ரெப்போ விகிதம் 6.50 சதவீதமாகவும் ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 6.25 சதவீதமாக வும் தொடரும்.

ஜூன் மாதத்துக்குப் பிறகு தொடர்ந்து ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தி வந்த நிலையில் கடந்த அக்டோபரில் நடந்த நிதிக் கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதத்தில் எந்த மாற்ற மும் செய்யப்படவில்லை. இதற்கு வங்கிகளிடமும் தொழில் துறையினரிடமும் வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களில் ரூபாய் மதிப்பு கடுமை யாக வீழ்ச்சி கண்டது. எனவே ரிசர்வ் வங்கி வட்டிவிகிதத்தை மீண்டும் உயர்த்துவதற்கான வாய்ப்பிருப்ப தாகக் கருதப்பட்டது. ஆனால், வங்கித்துறை மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்துவது சரியாக இருக்காது என்றும் கருதப்பட்டது.

இத்தகைய நெருக்கடியான நிலையில் நேற்று நடந்து முடிந்த நிதிக் கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது. பண இருப்பு விகிதத்திலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் 2019ம் ஆண்டின் இரண்டாம் பாதி யில் 3.9-4.5 சதவீதம் என்ற நிலை யில் உள்ள பணவீக்கத்தை 2.7-3.2 சதவீதமாகக் குறைக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. 2019- 2020-ம் நிதி ஆண்டில் ஜிடிபி வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் பொருளாதாரத்துக்கு உள்ள எதிர்கால சவால்கள், தொழில்துறையில் பணப்புழக்கம், சிறு, குறு தொழில்கள் உள்ளிட் டவைப் பற்றி விவாதிக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x