Published : 13 Oct 2018 08:27 AM
Last Updated : 13 Oct 2018 08:27 AM
பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப் பான செபி நான்கு நிறுவனங்களின் சொத்துகளை ஏலம்விட உள்ளது. முதலீட்டாளர்களின் பணத்தை வசூலிக்கும் நடவடிக்கையாக இந்த நிறுவனங்களின் சொத்துகள் ஏலம் விடப்பட உள்ளன.
இது தொடர்பாக செபி நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், ஸ்வார் அக்ரோடெக், லைப்கேர் இன்பிராடெக், செர்விஹிட் ஹவுஸிங் அண்ட் இன்பிராஸ்ட்ரக் சர் இந்தியா, ராகவ் கேபிடல் அண்ட் இன்பிராஸ்ட்ரக்சர் ஆகிய நான்கு நிறுவனங்களின் 6 சொத்துகள் இந்த ஏலத்துக்கு வருகின்றன. இவற்றுக்கான முன் வைப்பு தொகை ரூ.4.74 கோடியாகும்.
நவம்பர் 11-ம் தேதி இந்த ஏலம் நடைபெற உள்ளது. இந்த சொத்துகள் உத்தர பிரதேசம் மற்றும் ஹரியாணாவில் நிலங்க ளாக உள்ளன.
ஸ்வார் அக்ரோடெக் மற்றும் லைப் கேர் இன்பிராடெக் நிறுவனங் களில் தலா இரண்டு சொத்துகளும், இதர நிறுவனங்களில் தலா ஒரு சொத்தும் ஏற்கெனவே முடக்கப் பட்டுள்ளன.
இந்த ஏலத்துக்கான முன் வைப்புப் தொகை ரூ.4.74 கோடி என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த நிறுவனங்கள் செபி அனுமதி இல்லாமல் பொதுமக்க ளிடமிருந்து கூட்டு முதலீட்டு திட்டத்தின் கீழ் சட்டவிரோதமாக நிதி திரட்டியுள்ளன.
லைப் கேர் இன்பிராடெக் நிறுவனம், பங்கு விற்பனை மூலம் முதலீடுகளை திரட்டுவதற்கான எந்த விதிகளையும் பின் பற்றவில்லை. நவம்பர் 12-16 தேதிகளில் இந்த சொத்துகளை பார்வையிடலாம் என்றும் செபி தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள் ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT