Published : 11 Oct 2018 09:06 AM
Last Updated : 11 Oct 2018 09:06 AM

வளரும் நாடுகளின் பொருளாதாரம்; இந்தியாவின் கடன் சுமை குறைவாக உள்ளது: சர்வதேச செலாவணி நிதியம் கணிப்பு

சர்வதேச அளவில் வளரும் பொரு ளாதார நாடுகளில் இந்தியாவின் கடன் சுமை மிகவும் குறை வாக உள்ளது என்று சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) குறிப்பிட்டுள்ளது. இருந்தபோதி லும் சர்வதேச அளவிலான கடன் சுமை மிகவும் அதிகரித்து, அபாய அளவைத் தொட்டு விட்டதாக ஐஎம்எப் நிதி விவகாரத்துறை இயக் குநர் விடோர் கஸ்பர் எச்சரித்துள் ளார். 2017-ம் ஆண்டில் உலகின் கடன் சுமை 182 டிரில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.

இதில் இந்தியாவின் கடன் சுமை யானது அந்நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி திறனுடன் (ஜிடிபி) ஒப்பிடுகையில் குறைவாக உள்ளது.

2017-ம் ஆண்டில் இந்தியாவில் தனியார் நிறுவனங்களின் கடன் சுமை ஜிடிபி அளவில் 54.5 சதவீத மாக இருந்தது. அரசின் கடன் சுமை 70.4 சதவீதமாக இருந்தது. ஆக ஒட்டுமொத்த கடன் சுமை ஜிடிபி-யில் 125 சதவீதமாகும். அதேசமயம் சீனாவின் ஒட்டுமொத்த கடன் சுமை 247 சதவீதமாக உள்ளது என்றும் ஐஎம்எப் சுட்டிக் காட்டியுள்ளது.

உலகின் ஒட்டுமொத்த உற்பத் தித் திறனுடன் (டபிள்யூஜிடிபி) இந்தியாவின் கடன் சுமை குறைவாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத் தித் திறன் அடிப்படையிலான கடன் மற்றும் தனிநபர் நுகர்வு அடிப்படை யிலான கடன் ஆகிய இரண்டு விகிதத்துடன் ஒப்பிடுகையில் குறிப் பிடத்தக்க முன்னேற்றம் காணப்படு கிறது. உலக அளவில் வளரும் பொருளாதார நாடுகளில் இது சிறப்பாக உள்ளது. குறிப்பாக இந்தியாவின் கடன் சுமை குறைவாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சர்வதேச கடன் சுமை 182 டிரில்லியன் டாலர் அளவை எட்டியுள்ளது என்றும் எச்சரித்தார்.

சர்வதேச அளவில் நிதி நெருக் கடி நிலவும் சூழலில் வளரும் நாடு களில் கடன் சுமை அதிகரித்துள்ளது. அதேசமயம் தனியார் நிறுவனங்கள் கடன் பெறுவது கணிசமாகக் குறைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா வில் தனியார் நிறுவனங்கள் கடன் பெறுவது தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. அதேசமயம் 2015, 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் இந்த அளவானது சற்று குறைந் துள்ளது. ஆனால் அரசு கடன் பெறுவது இந்த மூன்று ஆண்டு களில் அதிகரித்துள்ளது என்றும் கஸ்பர் தெரிவித்தார்.

கடன் பெறுவதில் ஸ்திரமான நிலை நிலவுகிறது. அதிலும் குறிப் பாக இந்தியா போன்ற வளரும் நாட்டின் கடன் சுமை மற்றெந்த நாடுகளை விடவும் குறைவாகவே உள்ளது.

அதேசமயம் சீனாவில் மொத்த கடன் சுமை 247 சதவீதமாக உள்ளது. அங்கு தனியார் மற்றும் அரசு கடன் பெறும் அளவுகள் மாறுபடுகின்றன. சீன அரசு பெற்ற கடன் 37 சத வீதம் என குறிப்பிடப்படுகிறது. ஆனால் சர்வதேச பொருளாதார எதிர்பார்ப்பு கணிப்பு 47 சதவீதம் என கணக்கிட்டுள்ளது. சீனாவில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்டவை பெற்ற கடனுடன் சேர்த்தால் அது 68 சதவீதத்தை தொடுகிறது என்றும் கஸ்பர் குறிப்பிட்டார்.

சீனாவின் நிதி நிலையை மதிப் பிடும்போது, சீனாவிடம் போதுமான அளவுக்கு அரசு சொத்து உள்ள தால் அங்கு கட்டமைப்புத் திட்டங் களுக்கு கணிசமான முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் கஸ்பர் கூறினார்.

ஆனாலும் இந்த சொத்துகளின் மதிப்பானது அந்நாட்டு அரசு பெற்ற கடன் அளவை விட அதிகமாக உள்ளது. அந்த வகையில் வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட சீனாவின் கடன் சுமை மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக அதிகமாகவே உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x