Published : 09 Oct 2018 08:43 AM
Last Updated : 09 Oct 2018 08:43 AM

இந்தியர் தலைமையில் போயிங் எப்-15 போர் விமான திட்டம்

போயிங் நிறுவனத்தின் எப்-15 போர் விமான திட்டத்துக்குத் தலைமை தாங்கும் பொறுப்புக்கு இந்தியரான பிரத்யுஷ் குமார் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். போயிங் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

போயிங் இந்தியா நிறுவனத்தின் தலைவராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றி வந்துள்ளார் பிரத்யுஷ் குமார். இவருடைய பணி காலத் தில் போயிங் நிறுவனத்தின் தொழிலை வணிக விமானங்கள், பாதுகாப்பு, விண்வெளி மற்றும் பாதுகாப்பு, சர்வதேச சேவைகள் எனப் பல பிரிவுகளில் உலகள வில் உயர்த்தினார். தற்போது அமெ ரிக்காவின் எப்-15 ஜெட் விமான திட்டத்துக்குக்குத் தலைமை தாங்க உள்ளார்.

இதுகுறித்து போயிங் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், போயிங் நிறுவனத்தின் முக்கிய மான எப்-15 போர் விமான திட்டத்துக்கு தலைமை தாங்க பிரத்யுஷ் குமார் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

இவருடைய 5 ஆண்டு காலப் பணியில்தான் பெங்களூரில் இன் ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப மையம் நிறுவப்பட்டது. இதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்தியதோடு ஏரோ ஸ்பேஸ் சேவை சந்தையை உயர்த்தினோம். டாடாவுடன் இணைந்து அபாச்சி போர் ஹெலி காப்டருக்கு ஃப்யூஸ்லாஜ் உற்பத்தி செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x