Published : 06 Oct 2018 08:59 AM
Last Updated : 06 Oct 2018 08:59 AM

பிஎப்டபிள்யூ ஆலைக்கு ஆன்லைன் மூலம் ஒற்றை சாளர முறையில் அனுமதி: ரூ.50 கோடியில் ஓசூரில் அமைகிறது

பெரு நிறுவனங்களுக்கான தயா ரிப்பு தொழில்நுட்பங்களை அளிக் கும், பிஎப்டபிள்யூ (Bharat Fritz Werner) நிறுவனம் தமிழ்நாட்டில் புதிய ஆலையை அமைக்க உள்ளது. ஓசூரில் ரூ.50 கோடி முதலீட்டில் இந்த ஆலை அமைய உள்ளது.

தமிழ்நாடு அரசு தொழில் நிறு வன அனுமதிகளுக்கு ஒற்றைச் சாளர முறையை அறிமுகப்படுத் திய பின்னர், முதன் முதலில் ஆன் லைன் வழியாகவே அனைத்து அனுமதிகளையும் பெற்ற முதல் நிறுவனமாக பிஎப்டபிள்யூ உள்ளது.

இந்த நிறுவனம், தயாரிப்பு நிறுவனங்களுக்கு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை அளிப்பதில் இந்திய அளவில் மிகப் பெரிய நிறுவனமாகும். தமிழ் நாட்டின் எதிர்கால தொழில்துறை வளர்ச்சிக்கு ஏற்ப புதிதாக இங்கு ஆலை அமைக்க திட்டமிட் டுள்ளது.

நிறுவனத்தின் நிர்வாக இயக்கு நர் ரவி ராகவன் கூறுகையில், இந்தியாவில் தொழில்துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்துக்கான தேவை அதி கரித்து வருகிறது. இதற்கு ஏற்ற தொழில்நுட்ப தீர்வுகளை அளிக்கத் தயாராக உள்ளோம் என்றார். முக்கியமாக இந்த தொழிற்சாலைக் கான அனுமதியை ஒற்றைச் சாளர முறையில் ஆன்லைன் வழியாகவே பெற்றுள்ளோம் என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x