Published : 02 Oct 2018 04:16 PM
Last Updated : 02 Oct 2018 04:16 PM
கார், இரு சக்கர வாகனங்கள், வீட்டுக் கடன் ஆகியவற்றுக்கான வட்டி வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்துவரும் பண்டிகை சீசனையொட்டி வட்டியை வங்கிகள் உயர்த்தியுள்ளன.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கி ஆகியவை திங்கள்கிழமை முதல் கடனுக்கான வட்டியை உயர்த்திவிட்டன.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி, அனைத்து வகையான கடனுக்கான வட்டியை 5 பிபிஎஸ் புள்ளிகள் உயர்த்தி, 8.50 சதவீதமாக அதிரித்துள்ளது.
தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ வங்கி, 10 பிபிஎஸ் புள்ளிகளை அனைத்துக் கடன்களுக்கும் உயர்த்தி வட்டியை 8.65 சதவீதமாக அதிகரித்துள்ளது.
எச்டிஎப்சி வங்கியும் வீட்டுக்கடனுக்கான வட்டியை 10 பிபிஎஸ் புள்ளிகள் உயர்த்தியுள்ளது. ரூ.30 லட்சம் வரையிலான கடனுக்கு புதிய வட்டிவீதமாக ரூ.8.85 சதவீதமும், ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.75 லட்சம் வரையிலான கடனுக்கு 9 சதவீதம் வட்டியும், ரூ.75 சதவீதத்துக்கும் அதிகமான கடனுக்கு 9.05 சதவீதமும் வட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது. பெண்கள் பெயரில் கடன் பெற்றிருந்தால், அவர்களுக்கு 5 பிபிஎஸ் புள்ளிகள் தள்ளுபடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT