Published : 20 Sep 2018 09:13 AM
Last Updated : 20 Sep 2018 09:13 AM

புதிய தொழில்நுட்பங்களுடன் கென்ட் ஆர்ஓ

குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளில் முன்னணி நிறுவனமான கென்ட் தனது புதிய மேம்படுத்தப்பட்ட தயாரிப்பினை அறிமுகம் செய் துள்ளது. `நெக்ஸ்ட் ஜென் ஆர் ஓ’ என்கிற பெயரில் அறிமுகமாகி யுள்ள இந்த குடிநீர் சுத்திகரிப்பு கருவி டிஜிட்டல் டிஸ்ப்ளே வசதி யுடன் உள்ளது. நிறுவனத்தின் தலைவர் மகேஷ் குப்தா கூறுகையில்,

குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளில் பல பிராண்டுகள் மற்றும் உள்ளூர் போட்டிகள் இருந்தாலும் 25 சதவீத சந்தையை கென்ட் வைத்துள்ளது. நிறுவனத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி 50 சதவீதமாக உள்ளது. உயர்தரமான குடிநீர் சுத்திகரிப்பு கருவி என்கிற வகையில் சர்வ தேச தரச் சான்றுகளைப் பெற்றுள் ளோம். ஒருமுறை சுத்திகரிக்கப் பட்டகுடிநீர் 100 சதவீதம் தூய்மை யாக இருப்பதை உறுதி செய்யும் புதிய தயாரிப்பினை கொண்டு வந்துள்ளோம். சுத்திகரிக்கப்பட்ட நீர் பயன்படுத்தாமல் இருந்தாலும் யுவி தொழில்நுட்பம் நீரில் உள்ள பாக்ட்ரீயாக்களை நீக்கும். பில்டர் களின் ஆயுள், நீரில் உள்ள கனிமங் கள், நீரின் அழுத்தம் போன்ற வற்றைக் காட்டும் எல்இடி டிஸ் பிளே வசதியும் கொண்டிருக்கும். விரைவில் நொய்டாவில் எங்களது இரண்டாவது உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளோம் என்றும் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x