Published : 20 Sep 2018 09:09 AM
Last Updated : 20 Sep 2018 09:09 AM

பங்குச் சந்தை தொடர்ந்து சரிவு: 3 நாட்களில் ரூ.3.62 லட்சம் கோடி இழப்பு

இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக வர்த்தகச் சரிவு நீடித்தது. இதன் காரணமாக முதலீட்டாளர்களுக்கு ரூ.3.62 லட்சம் கோடி இழப்பு ஏற் பட்டுள்ளது. நேற்றைய வர்த்தக முடிவில் கடந்த இரண்டு மாதங் களில் இல்லாத வகையில் சென்செக்ஸ் 37,121.22 புள்ளிக ளுக்கு சரிந்தது. தொடர்ச்சியாக மூன்று நாட்களாக சந்தை 2.5 சதவீதம் அல்லது 970 புள்ளிகள் சரிந்துள்ளது. அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர் சூழல் நிலவு வதால் ரூபாய் மதிப்பு சரிவும் அதிகரித்துள்ளது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக் கும் இடையேயான வர்த்தகப் பனிப்போர் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கச்சா எண் ணெய் விலையிலும் ஏற்றம் தொடர் கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் காரண மாக டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பிலும் சரிவு தொடர்கிறது என்று சந்தை வல்லுநர்கள் கூறி னர். நேற்றைய வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 49 காசுகள் சரிந்தது. தினசரி வர்த்தகத்தில் அதிகபட்சமாக சரிவு 72.87 ரூபாய் வரை சென்றது.

நேற்றைய பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் 169.45 புள்ளிகள் சரிந்தது. நிப்டி 11,234 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்துள்ளது. சென்செக்ஸ் 37,062.69 புள்ளிகள் வரை சரிந்தது. ஜூலை 26-ம் தேதிக்கு பின்னர் இது அதிகபட்ச சரிவாகும்.

அந்நிய முதலீட்டாளர்கள் தொடர்ச்சியாக தங்களது முதலீடு களை விற்று வருகின்றனர். ரூ.1,143.73 கோடிக்கு பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.நேற் றைய வர்த்தகத்தில் மெட்டல் தவிர அனைத்து துறை குறியீடுகளும் சரிந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x