Published : 18 Sep 2018 04:00 PM
Last Updated : 18 Sep 2018 04:00 PM
டிசம்பர் 2017-ஐ ஒப்பிடுகையில் இந்திய ரூபாய் மதிப்பின் உண்மையான சரிவு 6-7%-க்கு இடையில் இருக்கும் என்று பன்னாட்டு நிதியமைப்பு ஐ.எம்.எஃப் தெரிவித்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் இதனால் பணவீக்கமும் அதிகரிக்கும் என்று ஐஎம்எப் எச்சரித்துள்ளது.
இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து இந்திய ரூபாய் மதிப்பு டாலருக்கு நிகராக சுமார் 11% சரிவு கண்டுள்ளதாக தெரிவித்த ஐ.எம்.எஃப் செய்தித் தொடர்பாளர் கெரி ரைஸ் தெரிவித்தார்.
இந்திய ரூபாய் மட்டுமல்ல, இந்தியாவின் வர்த்தகக் கூட்டாளி நாடுகளின் பணமதிப்பும் டாலருக்கு நிகராகச் சரிந்துள்ளது.
“இதனால் டிசம்பர் 2017-ஐ ஒப்பிடும் போது இந்திய ரூபாயின் மதிப்பு எங்கள் மதிப்பீடுகளின் படி 6-7% சரிவடைந்துள்ளது” என்கிறார் கெரி ரைஸ்.
இந்தியா ஒரு மூடுண்ட பொருளாதாரம் என்ற அவர், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் வளர்ச்சியில் நிகர ஏற்றுமதிகள் எதிர்பார்த்ததை விட வலுவாக உள்ளது ரூபாய் மதிப்பின் உண்மையான சரிவு நிலை இதே போக்கை மீண்டும் வலுப்படுத்துவதாக உள்ளது என்றார்.
மாறாக ரூபாய் மதிப்புச் சரிவு கச்சா எண்ணெய் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதி விலைகளை அதிகரிக்கும் இதனால் பணவீக்கமும் அதிகரிக்கும் என்கிறார் கெரி ரைஸ்.
அதே போல் சமீப காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி நுகர்வு, முதலீடுகளில் வலுவான போக்கைக் கடைபிடித்து வருகிறது. அது பொருளாதாரத்துக்கு உதவுகிறது.
பணமதிப்பு நீக்கம் ஜிஎஸ்டி ஆகியவற்றின் தாக்கத்தை தொடர்ந்து தாங்கள் அவதானித்து வருவதாக ஐ.எம்.எஃப். தெரிவித்துள்ளது.
பணமதிப்பு நீக்கம் பணப்புழக்கத்தை குறைத்ததால் பொருளாதாரம் மந்தமடைந்தது, ஆனால் டிஜிட்டல்மயம், பொருளாதார முறைப்படுத்தம், இதனால் வரி வருவாய் ஆகியவை அதிகரித்துள்ளதும் நடந்துள்ளது என்றார் ரைஸ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT