Published : 16 Sep 2018 10:08 AM
Last Updated : 16 Sep 2018 10:08 AM

கிராமங்களில் அதிகரிக்கும் கேஷ்லெஸ் கடன்கள்: டிஜிட்டலைசேஷன், ஜன் தன் யோஜனா திட்டங்களின் பலன் என வல்லுநர்கள் கருத்து



கிராமப்புறங்களில் கடன் வழங்கு வதில் மைக்ரோ பைனான்ஸ் நிறு வனங்கள் டிஜிட்டல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திவரு வதால் கடன் வழங்குவதில் பெரிய மாற்றம் உருவாகிவருகிறது.

மைக்ரோ பைனான்ஸ் அதா வது குறுங்கடன் வழங்கும் நிறு வனங்கள் கிராமப்புறங்களில் கேஷ் லெஸ் (பணமில்லா பரிவர்த்தனை) முறையில் கடன் வழங்கும் தொழில் நுட்பங்களைத் தீவிரமாகச் செயல் படுத்தி வருகின்றன. இதனால் மைக்ரோ பைனான்ஸ் கடன்களில் 90 சதவீதத்துக்கும் மேல் கேஷ்லெஸ் முறையில் வழங்கப்பட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது.

வங்கி அல்லாத நிதி நிறுவனங் கள் மற்றும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள விவரங்கள்படி, இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் வழங்கப்பட்ட கடன் களில் 87 சதவீதம் கேஷ்லெஸ் முறையில் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் மொத்தம் 42 லட்சம் கணக்குகளுக்கு வழங்கப் பட்ட மொத்த கடன் மதிப்பு ரூ. 11,404 கோடி. இது கடந்த நிதி ஆண்டின் இறுதி காலாண்டில் 73 சதவீதமாக இருந்தது.

மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங் களின் கூட்டமைப்பில் உறுப்பின ராக உள்ள நிறுவனங்களில் 28 நிறுவனங்கள் 90 சதவீதம் கேஷ் லெஸ் முறையில் கடன்களை வழங் கியுள்ளன. சில நிறுவனங்கள் 100 சதவீதத்துக்கு கேஷ்லெஸ் முறை யில் கடன்கள் வழங்கியுள்ளன.

தற்போது சோதனை அடிப்படை யில் செயல்பபட்டுவரும் இந்த கேஷ்லெஸ் முறை பல்வேறு சர்வீஸ் பாயின்ட் நெட்வொர்க் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுவரு கிறது. இது நாளடைவில் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் கிராமப்புறங் களில் இருப்பவர்கள் இருந்த இடத்திலிருந்தே பல்வேறு வசதி களைப் பெறுவதில் ஆர்வமுடன் இருக்கிறார்கள். இதற்கு டிஜிட்ட லைசேஷன், டிமானிட்டைசேஷன், மற்றும் ஜன்தன் கணக்குகள் மூலம் ஏற்பட்ட விழிப்புணர்வே காரணம் என்கிறார்கள் வல்லுநர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x