Published : 15 Sep 2018 08:48 AM
Last Updated : 15 Sep 2018 08:48 AM

சமூக சேவைக்காக 200 கோடி டாலர்: அமேசான் நிறுவனர் ஜெஃப் பிஸோஸ் முடிவு

அமேசான் நிறுவனரும், உலகின் முதல்நிலை பணக்காரரருமான ஜெஃப் பிஸோஸ் 200 கோடி டாலரை சமூக சேவைக்காக அளித்துள்ளார். `டே ஒன் பண்ட்’ என்கிற அமைப்பினையும் இதற்காக தொடங்கியுள்ளார். இது தொடர்பாக ட்விட்டர் பதிவில்,

இந்த தொகையை குறைந்த வருமான பிரிவினர் பயன்படுத்தும் வகையில் கட்டணமில்லா ஆரம்ப பள்ளிகள் உருவாக்கவும், வீடில்லாத மக்களுக்கு வீடுகளை கட்டித்தரவும் பயன்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிஸோஸின் தற்போதைய சொத்து மதிப்பு 16,390 கோடி டாலராகும். பிஸோஸின் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட சொத்துகள் அமேசான் பங்குகளாக உள்ளன. தற்போது அவரிடம் 8 கோடி அமேசான் பங்குகள் உள்ளன. வெல்த் எக்ஸ் ஆய்வு அறிக்கையில், முதலீடுகள், சம்பளம் மற்றும் போனஸ்கள் வழியாகவும் அவருக்கு வருமானம் வருவதாக குறிப்பிட்டுள்ளது.

அமேசான் பங்குகள் 2018-ம் ஆண்டில் 70 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. அவரது சொத்து மதிப்பு தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. அதே நேரத்தில் சமூக சேவைக்காகவும் பெரும் தொகையை ஒதுக்கி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x