Published : 15 Sep 2018 08:46 AM
Last Updated : 15 Sep 2018 08:46 AM
வெளிநாட்டிலிருந்து கார், பைக் இறக்குமதி செய்யும் விதிமுறை களில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்துள்ளது. ஆட்டோ மொபைல் உற்பத்தி நிறுவனம், அல்லது அவர்களது பிரதிநிதியோ வெளிநாட்டிலிருந்து கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை இறக்குமதி செய்யலாம். முக்கியமாக விலை, என் ஜின் திறன் ஒரு பொருட்டல்ல.
இது தொடர்பாக சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளி யிட்டுள்ள புதிய விதிமுறைகளில் கூறியிருப்பதாவது,
ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வ தேச தரத்துடனான கார் அல்லது பைக் வாகனங்களை வெளிநாட்டி லிருந்து 2500 வாகனங்கள், பேருந்து, டிரக் போன்றவற்றில் 500 வாகனங்கள் இறக்குமதி செய்யலாம். விலை, என்ஜின் திறன் உள்ளிட்டவற்றில் கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. மேலும் உள்நாட்டு சோதனைகளில் தேர்வாக வேண்டிய அவசிய மில்லை. சர்வதேச தர நிர்ணய ஏஜென்சிகளின் சோதனைகளில் தேர்வானால் போதுமானது. நிறுவனங்கள் வாகன உதிரி பாகங்களையும் சர்வதேச தரத்தில் இறக்குமதி செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT