Published : 11 Sep 2018 08:54 AM
Last Updated : 11 Sep 2018 08:54 AM
ஹாத்வே கேபிள் மற்றும் டேட்டா காம் நிறுவனம், 300 எம்பிபிஎஸ் வேகத்தில் புதிய மெஷ் வைஃபை தொழில்நுட்பத்துடன் பிராட்பேண்ட் இணைய சேவையை சென்னையில் நேற்று அறிமுகம் செய்தது. இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பொழுது போக்கு மற்றும் தொழில் காரணங் களுக்காக அதிவேக இணைய சேவையின் தேவையும் அதிக மாக உள்ளது. இதை பூர்த்தி செய்வதற்காக ஹாத்வே நிறுவ னம் புதிய தொழில்நுட்பத்துடன் களமிறங்கியுள்ளது.
இந்தியாவில் முதன்முறையாக மெஷ் வைஃபை தொழில்நுட் பத்தில் இயங்கும் ‘ஹாத்வே எட்ஜ்’ என்ற சேவையை ஹாத்வே நிறுவனம் கொண்டு வந்துள்ளது. இந்த மெஷ் தொழில்நுட்பம் உலக ளவில் அதிவேக இணைய சேவைக் காகப் பயன்படுத்தப்படும் முன் னணி தொழில்நுட்பமாகும். 300 எம்பிபிஎஸ் வேகம், 2 டிபி டேட்டா வுடன் வரும் இந்த ’ஹாத்வே எட்ஜ்’ 12 மாத பேக்கேஜ் மாதம் ரூ. 1250க்கு அறிமுகப்படுத்தப் பட்டுள் ளது என்று இந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ராஜிவ் குப்தா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT