Published : 02 Sep 2018 01:04 AM
Last Updated : 02 Sep 2018 01:04 AM

கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு அமெரிக்காவின் தவறான கொள்கைகளே காரணம்: பெட்ரோலியத் துறை அமைச்சர் பிரதான் குற்றச்சாட்டு

அமெரிக்கா கடைப்பிடிக்கும் தவறான கொள்கைகள்தான் சர்வ தேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரு வதற்கு காரணம் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டார்.

தினசரி பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது குறித்து மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ள தோடு இது குறித்து கவலையும் அடைந்துள்ளது. அதேசமயம் இதை குறைப்பதற்குத் தேவை யான அனைத்து நடவடிக்கை களையும் அரசு எடுத்து வருகிறது.

அமெரிக்கா பின்பற்றும் தவ றான அதாவது அமெரிக்க நலனை மட்டுமே கருத்தில் கொண்டு எடுக்கும் நடவடிக்கைகளால் பெரும்பாலான நாடுகளின் கரன்சிகள் சரிவைச் சந்தித்துள்ளன. டால ருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்துள்ளது. கச்சா எண் ணெய் விலை மிக அதிகபட்ச மாக தொடர்ந்து அதிகரித்து வரு கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வெகுவாக பாதிக்கும் இரண்டு காரணிகள் உள்ளன. ஒன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவது, அடுத்தது கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் தொடர்ந்து அதிகரித்து வருவதுதான் என்றும் பிரதான் குறிப்பிட்டார்.

கச்சா எண்ணெய் விலை அதி கரித்து வருவதால் சனிக்கிழமை யும் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டன. டீசல் முன் னெப்போதும் இல்லாத அளவுக்கு

அதிகபட்ச விலைக்கு விற்கப்பட் டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் அதிகரித்து ரூ. 78.68 என்ற விலையில் மும்பையில் விற்பனையானது.

பிற மாநிலங்களைக் காட்டிலும் டெல்லியில் மட்டும்தான் பெட் ரோல், டீசல் விலை சற்று குறை வாக உள்ளன. இதற்கு முக்கியக் காரணமே இங்கு மதிப்பு கூட்டு வரி (வாட்) குறைவாக இருப்பதுதான். மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 86.09 என்ற விலையிலும் டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ. 74.76 என்ற விலையிலும் விற்பனையானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x