Published : 18 Aug 2018 09:25 AM
Last Updated : 18 Aug 2018 09:25 AM
தமிழகத்தில் ஆன்லைன் வழியாக ஹோட்டல் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் முந்தைய ஆண்டின் இதே காலாண்டைவிட 25 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளதாக மேக் மை டிரிப் நிறுவனத்தின் இந்திய ஹோட்டல் கள் பிரிவின் தலைமை வணிக அதிகாரி பரிக்ஷித் செளத்ரி தெரி வித்துள்ளார். தமிழ் உள்ளிட்ட வட்டார மொழிகளில் மேக் மை டிரிப் சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
தமிழகத்தில் 3,500-க்கும் மேற் பட்ட ஹோட்டல்கள் மேக் மை டிரிப் தளத்தில் பதிவுசெய்யப்பட்டுள் ளன. சென்னையில் மட்டும் 1,000 ஹோட்டல்களில் மேக் மை டிரிப் மூலம் முன்பதிவு செய்யமுடி யும். வாடிக்கையாளர் ஹோட்டல் களுக்கு அளிக்கும் ரேட்டிங் புள்ளி களுக்கு ஏற்ப ஆண்டுதோறும் ஹோட்டல்களுக்கு விருதுகளை வழங்கிவருகிறோம்.
மேக் மை டிரிப் தளத்தில் முன் பதிவு செய்வதை அனைத்து தரப்பு மக்களுக்கும் எடுத்துசெல்லும் வகையில் வட்டார மொழிகளை அறிமுகப்படுத்த இருக்கிறோம். 3 முதல் 6 மாதத்துக்குள் இந்த சேவை பயன்பாட்டுக்கு வரும். அமேசான் அலெக்ஸா கருவியைப் பயன்படுத்தி குரல்வழிக் கட்டளை கள் மூலம் முன்பதிவு செய்யும் சேவையை அறிமுகம் செய்வதற் கான பணிகளை ஏற்கெனவே தொடங்கிவிட்டோம். வாடிக்கை யாளர் முன்பதிவு செய்த தகவல் களை வாட்ஸ் அப் வழியாக அனுப் பும் சேவையும் அறிமுகப்படுத்தப் பட இருக்கிறது. இதன்மூலம் மேக் மை டிரிப் தளத்துக்கு வராமல் வாட்ஸ் அப்பிலிருந்தே முன்பதிவு செய்த பயணத்தை ரத்து செய்ய இயலும்.
இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஒட்டுமொத்தமாக நஷ்டம் அடைந்திருந்தாலும் விமான டிக்கெட் முன்பதிவு மற்றும் பேருந்து சேவைகள் வழக்கம் போல லாபம் ஈட்டியுள்ளன. தமிழ கத்தில் ஆன்லைன் வழியாக ஹோட்டல்கள் முன்பதிவு செய்வது 20 முதல் 25 சதவீதம்வரை இந்த காலாண்டில் வளர்ச்சி கண்டுள்ளது. இது தேசிய சராசரிக்கு நிகரான தாகும்.
பிளிப்கார்ட் நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தம் மூல மாக மேக் மை டிரிப் வாடிக் கையாளர் அல்லாதவர்களும் பிளிப்கார்ட் தளம் வழியாக எங்கள் சேவையைப் பெற லாம். என பரிக்ஷித் செளத்ரி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT