Published : 15 Aug 2018 08:42 AM
Last Updated : 15 Aug 2018 08:42 AM

காஸ்மாஸ் வங்கியில் ரூ. 94 கோடி மோசடி: ஹேக்கர்ஸ் கைவரிசை

புனேவைச் சேர்ந்த நூற்றாண்டுகள் பழமையான காஸ்மாஸ் கூட் டுறவு வங்கியில் சைபர் அட் டாக் மூலம் ரூ.94 கோடி மோசடி நடைபெற்றுள்ளது. ஹேக்கர் கள் மூலம் இந்த மோசடி நடை பெற்றுள்ளது. அடையாளம் தெரி யாத ஹேக்கர்கள் காஸ்மாஸ் கூட்டுறவு வங்கியிலிருந்து வெளி நாட்டு வங்கி கிளைக்கு ரூ.94 கோடியை பரிமாற்றம் செய்துள்ள னர்.

இது தொடர்பாக விசாரணை செய்துவரும் காவல்துறை அதி காரிகள் கூறுகையில், ஹேக்கர்கள் மால்வேர் மென்பொருள் மூலம் வங்கியின் கணினிகளை கட்டுப் படுத்தி, மூன்று நாட்களில் 12 ஆயிரம் பரிவர்த்தனைகள் மூலம் இந்த தொகையை பரிமாற்றம் செய் துள்ளனர்.

இது தொடர்பாக பேசிய வங்கி அதிகாரிகள் , வாடிக்கையாளர் கள் இதற்காக அச்சப்படத் தேவை யில்லை. இந்த தொகை எந்த ஒரு வங்கிக் கணக்கிலிருந்தும் எடுக்கப்படவில்லை என்று விளக் கம் அளித்துள்ளனர்.

வங்கியின் நிர்வாக இயக்குநர் சுஹாஸ் கோகலே, அனைத்து வாடிக்கையாளர்களின் பணமும் பாதுகாப்பாக உள்ளது என்று உறுதியளித்துள்ளார். வைரஸ் களை தடுக்கும் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் காரணமாக, ஹேக்கர்களால் வங்கிக் கணக்கு களுக்குள் நுழைய முடியவில்லை. வங்கிகளுக்கு இடையிலான பரிவர்த்தனை கணக்குகள் மூல மாக இந்த தொகையை ஹேக்கர் கள் பரிமாற்றம் செய்துள்ளனர். இது தொடர்பாக தணிக்கை நடந்து வருகிறது என்று குறிப் பிட்டுள்ளார்.

இந்த மோசடி திங்கள்கிழமை தெரியவந்துள்ளது இது தொடர் பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வங்கியின் வாடிக்கையாளர் விவரங்களை திருடி ஹேக்கர்கள் இந்த மோசடி யில் ஈடுபட்டுள்ளதாக புனே சைபர் கிரைம் காவல்துறை கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x