Published : 13 Aug 2018 07:56 AM
Last Updated : 13 Aug 2018 07:56 AM
மத்திய அரசின் 343 திட்டங்களில் 60 சதவீத திட்டங்கள் ரயில்வே துறை சம்பந்தப்பட்டவை என் றும் இவற்றுக்கு ஏற்கெனவே திட்ட மிட்ட தொகையைவிட ரூ.1.82 லட்சம் கோடி கூடுதலாக செலவாகி வருவதாக மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரூ.150 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட தொகை செலவிடப் படவுள்ள திட்டங்களைப் புள்ளி யியல் மற்றும் திட்ட அமலாக் கத் துறை அமைச்சகம் கண் காணித்து வருகிறது. இந்த அமைச் சகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் 204 ரயில்வே திட்டங் களுக்கு ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட தொகையைவிட ரூ.1.82 லட்சம் கோடி கூடுத லாக செலவாகி வருவதாக தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் வரை இந்த 204 திட்டங்களுக்கு ரூ.1,29,339.96 கோடி தொகை செலவாகும் என திட்டமிடப்பட்டிருந்ததாகவும், ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த திட்டங்களுக்கு மொத்தமாக ரூ.3,12,026.83 கோடிவரை செலவாகியுள்ளதாக கணித்துள்ளதாகவும் புள்ளியியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது திட்டமிடப்பட்ட தொகையைவிட 141.25 சதவீதம் அதிகமாகும்.
மொத்தமாக 330 இந்திய ரயில்வே திட்டங்களை புள்ளியியல் அமைச்சகம் கண்காணித்து வருகிறது. இவற்றில் 46 திட்டங்கள் நிர்ணயிக்கப்பட்ட காலத்தைவிட 3 முதல் 261 மாதங்கள் வரை அதிக காலம் எடுத்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே திட்டங்களுக்கு அடுத்தபடியாக மின் துறை திட்டங்களுக்கு ஏற்கெனவே திட்டமிட்ட தொகையைவிட அதிகமாக செலவாகி வருகிறது. 114 மின் துறை திட்டங்களில் 47 திட்டங்களுக்கு ஏற்கெனவே திட்டமிடப்பட்ட தொகையைவிட கூடுதலாக ரூ. 70,940.81 கோடி அளவுக்கு செலவாகியுள்ளது. இந்த 47 திட்டங்களுக்கு தொடக்கத்தில் திட்டமிடப்பட்ட தொகை ரூ.1,84,243.07 கோடி ஆகும். தற்பொழுது ரூ.2,55,183.88 கோடிவரை செலவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த முள்ள 114 மின் துறை திட்டங்களில் 61 திட்டங்கள் 2 முதல் 135 மாதங்கள் வரை தாமதமாகி உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT