Published : 06 Aug 2018 09:39 AM
Last Updated : 06 Aug 2018 09:39 AM

மெகுல் சோக்ஸியை இந்தியா கொண்டு வர ஆண்டிகுவாவுக்கு தனிப்படை விரைவு

பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு வழக்கில் சம்பந்தப்பட்ட மெகுல் சோக்ஸி ஆண்டிகுவா தீவில் தங்கி இருப்பதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து அவரை இங்கு கொண்டு வர சில நாட்களுக்கு முன்பு இந்திய குழு ஆண்டிகுவா சென்றிருப் பதாக தகவல்கள் தெரிவிக்கின் றன. இந்த குழு ஆண்டிகுவா நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகளைச் சந் தித்து, மெகுல் சோக்ஸியை இந்தியா கொண்டு செல்வதற் கான கோரிக்கையை வைத்ததாக தெரிகிறது. நாட்டின் மிகப்பெரிய வங்கி மோசடி வழக்கில் தொடர் புடைய மெகுல் சோக்ஸியை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தேடி வருகிறது.

ஆண்டிகுவா குடியுரிமை

இவர் 2017-ம் ஆண்டு நவம்பரில் ஆண்டிகுவா குடியுரிமை பெற்ற தாக தெரிகிறது. இந்தியாவில் இருந்து ஜனவரி 4-ம் தேதி வெளியேறினார். ஒரு லட்சம் டாலர் முதலீடு செய்யும் செய்யும் பட்சத்தில் ஆண்டிகுவா நாட்டின் குடியுரிமையை ஒருவர் பெற முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x