Published : 10 Jul 2018 08:22 AM
Last Updated : 10 Jul 2018 08:22 AM
உலகின் மிகப் பெரிய செல்போன் உற்பத்தி ஆலையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உத்தர பிரதேச மாநிலத் தில் இந்த ஆலையை அமைத்துள்ளது. இந்தியாவுக்கு வருகை தந்துள்ள தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இந்த ஆலையை திறந்து வைத்தனர்.
சாம்சங் எலெக்ட்ரானிஸ் நிறுவனம் இந்திய சந்தையை விரிவாக்கம் செய்யும் விதமாக இந்த ஆலையை திறந்துள்ளது. இந்த ஆலையின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 6.7 கோடி செல்போன்களை சாம்சங் தயாரிக்கும். இந்த ஆலையின் உற்பத்தி திறனை 12 கோடிவரை அதிகரிக்க செய்யமுடியும் என்றும் சாம்சங் கூறியுள் ளது. இந்தியாவில் தற்போது சாம்சங் நிறுவனம் விற்பனையில் இரண்டாவது இடத்தில் உள்ளது, சர்வதேச அளவில் 10 சதவீத சந்தையை சாம்சங் வைத்துள்ளது. 2017-ம் ஆண்டில் 29.9 கோடி செல்போன்களை நிறுவனம் தயாரித்துள்ளது. 2022-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் சாம்சங் செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை 34 கோடியாக உயர்த்த நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 44.2 கோடியாக அதிகரிக்கும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
2016-17-ம் ஆண்டில் சாம்சங் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.50,000 கோடியில் செல்போன் விற்பனை வருவாய் ரூ.34,000 கோடியாகும். இந்த ஆலையில் சாம்சங் நிறுவனம் ரூ. 4,915கோடி முதலீடு செய்துள்ளது. இந்திய சந்தை தவிர ஐரோப்பா, மேற்கு ஆசிய, ஆப்பிரிக்க சந்தைகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதி செய்ய உள்ளது. இந்த ஆலையை ஒட்டியுள்ள 35 ஏக்கர் நிலத்தில் விரிவாக்கம் செய்து உற்பத்தியை இரட்டிப்பாகவும் திட்டம் வைத்துள்ளது.-பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT