Published : 09 Jul 2018 08:46 AM
Last Updated : 09 Jul 2018 08:46 AM

புதிய ரூபாய் நோட்டுகளை விமானம் மூலம் எடுத்துச்செல்ல செலவான தொகை ரூ.29.41 கோடி

பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு புதிய ரூபாய் நோட்டுகளை நாடு முழுவதும் எடுத்துச்செல்வதற்கு இந்தியா விமான படையின் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கான செலவு ரூ.29.41 கோடி என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்திருக் கிறது.

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதிய ரூ.500 மற்றும் ரூ.2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. இந்தியாவின் அனைத்து நகரங்களுக்கும் புதிய ரூபாய் நோட்டுகள் செல்ல வேண்டும் என்பதற்காக விமானப் படையின் சி 17 மற்றும் சி130ஜே ரக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. நாடுமுழுவதும் 91 முறை இந்த ஹெலிகாப்டர்கள் பறந்திருக்கின்றன. ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி லோகேஷ் பத்ரா ஆர்டிஐ-க்கு அனுப்பிய கேள்வி மூலம் இந்தத் தகவல் தெரிய வந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x