Published : 30 Jun 2018 09:37 AM
Last Updated : 30 Jun 2018 09:37 AM
ஐசிஐசிஐ வங்கியின் புதிய தலைவராக கிரிஷ் சந்திரா சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார். ஜூலை 1-ம் தேதி முதல் பணியினை தொடங்குவதற்கு இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. தினசரி வங்கி பொறுப்புகள் இல்லாத பகுதி நேரத் தலைவராக இவர் செயலாற்றுவார். இவரது நியமனத்துக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. வங்கி இயக்குநர் குழுவின் தற்போதைய தலைவர் எம்.கே.சர்மாவின் பதவி காலம் முடிவடைவதையொட்டி புதிய தலைவராக சதுர்வேதி நியமிக்கப் பட்டுள்ளார்.
எம்.கே.சர்மாவின் பதவிக்காலம் ஜூன் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் வங்கியின் இயக்குநர் குழு கூடி ஜி.சி சதுர்வேதியை கூடுதல் இயக்குநராக நியமிக்க முடிவு செய்துள்ளது. ஜூலை 1-ம் தேதி முதல் மூன்றாண்டுகளுக்கு பணியாற்றுவார் என்று வங்கி மும்பை பங்குச் சந்தைக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளது.
இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான சதுர்வேதி, ஏற்கெனவே பெட்ரோலியத்துறை செயலராக பணியாற்றியவர். நிதிச் சேவை துறை கூடுதல் செயலராகவும், நிதி மற்றும் கணக்கு துறை சிறப்பு பொது இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். -பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT