Published : 30 Jun 2018 09:35 AM
Last Updated : 30 Jun 2018 09:35 AM

பாங்க் ஆப் மகாராஷ்டிரா சிஇஓ பதவி பறிப்பு

பாங்க் ஆப் மகாராஷ்டிரா நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஆர். மாரதே-யின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இவருடன் செயல் இயக்குநர் ஆர்.கே. குப்தாவின் பதவியும் பறிக்கப்பட்டுள்ளதாக வங்கி கூறியுள்ளது.

ரிசர்வ் வங்கி விதிமுறைகளை மீறி ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு இவர்கள் கடன் வழங்கியதாக குற்றம் சுமத்தி சிபிஐ வழக்கு பதிவு செய்து கைது செய்தது. வங்கியின் மற்றொரு செயல் இயக்குநரான ஏ.சி.ரௌத் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்படுவதாக வங்கி செய்தி வெளியிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x