Published : 25 Jun 2018 08:09 AM
Last Updated : 25 Jun 2018 08:09 AM
ஜூன் 30-ம் தேதிக்குள் ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்கள் இணைவதற்காக காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் நிர்ணயம் செய்யப்பட்ட காலத்துக்குள் இந்த இணைப்பு நடைபெறுவதற்கான சாத்தியம் இல்லை என தெரிகிறது. வோடபோன் நிறுவனம் ஒரு முறை ஸ்பெக்ட்ரம் கட்டணமாக செலுத்த வேண்டிய ரூ.4,700 கோடி நிலுவையில் இருக்கிறது. தொலைத் தொடர்பு துறைக்கு இந்த தொகையை செலுத்த வேண்டும் அல்லது இந்த தொகைக்கு வங்கி உத்திரவாத கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும் என தொலைத்தொடர்பு துறை உத்தரவிட திட்டமிட்டிருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
வோடபோன் கிழக்கு, வோடபோன் தெற்கு, வோடபோன் செல்லுலார் மற்றும் வோடபோன் டிஜிலிங்க் ஆகிய துணை நிறுவனங்கள் வோடபோன் மொபைல் சர்வீசஸ் என்னும் நிறுவனத்துடன் 2015-ம் ஆண்டு இணைக்கப்பட்டன. தற்போது இந்த நிறுவனம் வோடபோன் இந்தியா என அழைக்கப்படுகிறது. தொலைத்தொடர்பு துறை அப்போது ஒரு முறை கட்டணமாக ரூ.6,678 கோடி செலுத்த உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதனை எதிர்த்து வோடபோன் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுபடி ரூ.2,000 கோடி மட்டுமே நிறுவனம் செலுத்தியது. இந்த நிலையில் மீதமுள்ள தொகையை கேட்க தொலைத்தொடர்பு துறை முடிவெடுத்திருக்கிறது. இதனால் இரு நிறுவனங்களும் இணைக்கப்படும் நடவடிக்கையில் கால தாமதம் ஏற்படும் என தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT