Published : 10 Jun 2018 09:15 AM
Last Updated : 10 Jun 2018 09:15 AM

பிளாஸ்டிக் ஒழிப்பு: இந்தியாவின் நடவடிக்கைக்கு ஐநா பாராட்டு

2022-ம் ஆண்டுக்குள் மறு சுழற்சி செய்ய முடியாத, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலுமாக ஒழித்துவிடுவோம் என இந்திய அரசு அறிவித்துள்ளதை ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச் சூழல் பிரிவின் தலைவர் எரிக் சோல்ஹெம் பாராட்டியுள்ளார்.

புதுடெல்லியில் ஜூன் 5-ம் தேதி நடைபெற்ற உலக சுற்றுச் சூழல் தின கொண்டாட்டத்தின்போது மத்திய சுற்றுச் சூழல்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இத்தகைய உறுதி மொழியை அளித்தார்.

உலக சுற்றுச் சூழல் தினத்தை இந்தியா மிகவும் அர்த்தமுள்ளதாக்கி பிற நாடுகளுக்கு முன்னோடியாக திகழ்கிறது. அன்றைய தினம் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள், கடற்கரை தூய்மைபடுத்தல் உள்ளிட்ட தூய்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதையும் சோல்ஹெம் பாராட்டியுள்ளார். 2018-ம் ஆண்டின் உலக சுற்றுச்சூழல் தின முழக்கமே பிளாஸ்டிக் மாசை ஒழிப்போம் என்பதாகும். -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x