Published : 02 Jun 2018 08:52 AM
Last Updated : 02 Jun 2018 08:52 AM
மே மாத சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ரூ.94,016 கோடியாக இருக்கிறது. ஆனால் கடந்த ஏப்ரலில் ரூ.1.03 லட்சம் கோடி அளவுக்கு வசூலானது. கடந்த நிதி ஆண்டில் சராசரியாக மாதத்துக்கு ரூ.90,000 கோடியாக வந்திருந்த நிலையில் மே மாத வசூல் ரூ.94,016 கோடியாக இருக்கிறது. மொத்த தொகை மட்டுமல்லாமல், வரி செலுத்தும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் உயர்ந்திருப்பதாக நிதித்துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா தெரிவித்திருக்கிறார். ஏப்ரல் மாத இறுதியில் 60.47 தாக்கல்கள் மட்டுமே செய்யப்பட்டன. ஆனால் மே மாதம் 62.46 லட்சம் தாக்கல்கள் செய்யப்பட்டிருப்பதாக ஆதியா குறிப்பிட்டிருக்கிறார். மேலும் இ-வே பில்கள் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு வரி வசூல் உயர்ந்திருக்கிறது.
மத்திய ஜிஎஸ்டி ரூ.15,866 கோடி
வசூலான தொகையில் ரூ.15,866 கோடி மத்திய ஜிஎஸ்டியாகவும், ரூ.21,691 கோடி மாநில ஜிஎஸ்டியாகவும், ரூ.49,120 கோடி ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாகவும் வசூலாகி இருக்கிறது. செஸ் மூலமாக ரூ.7,339 கோடி வசூலாகி இருக்கிறது. 2017-2018 நிதியாண்டில் ஜிஎஸ்டி மூலம் ஏற்பட்டுள்ள இழப்பீட்டை சமாளிக்கும் வகையில் மொத்தமாக ரூ.47,844 கோடி மாநில அரசுகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT