Published : 04 May 2018 08:09 AM
Last Updated : 04 May 2018 08:09 AM

இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் அமைப்பின் 27-வது கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்வதில் எளிமையான முறைகளை செயல்படுத்துவது தொடர்பாக மூன்று மாதிரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அது குறித்து இக்கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது. மாதந்தோறும் தாக்கல் செய்வதற்கு பதிலாக காலாண்டுக்கு ஒருமுறை தாக்கல் செய்வது குறித்த பரிந்துரையும் இக்கூட்டத்தில் பரிசீலிக்கப்பட உள்ளது.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் வீடியோ கான்பரன்ஸ் முறையில் பங்கேற்று கருத்துகளை தெரிவிக்க உள்ளனர்.

ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ள நிலையில் இந்தக் கூட்டம் கூட்டப்படுவது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஜிஎஸ்டி நெட்வொர்க் அமைப்பை அரசு நிறுவனமாக மாற்றுவது தொடர்பான யோசனையும் இக்கூட்டத்தில் பரிசீலிக்கப்பட உள்ளது.

ஜிஎஸ்டிஎன் நிறுவனத்தில் ஐந்து நிறுவனங்களான ஹெச்டிஎப்சி லிமிடெட், ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, என்எஸ்இ ஸ்ட்ரேடஜிக் இன்வெஸ்ட்மென்ட் கோ மற்றும் எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆகிய ஐந்து நிறுவனங்கள் 51 சதவீத பங்குகளை வைத்துள்ளன. எஞ்சிய 49 சதவீத பங்குகள் மத்திய, மாநில அரசுகள் வசம் உள்ளது.

சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள ஜேட்லி, நோய் தொற்றுக்கு ஆளாக நேரிடும் என்பதால் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் இக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x