Published : 04 May 2018 08:04 AM
Last Updated : 04 May 2018 08:04 AM
வங்கி மற்றும் நிதி சேவைகளை அளித்துவரும் டிபிஎஸ் குழுமங்களின் தலைமைச் செயல் அதிகாரி. நவம்பர் 9, 2009 முதல் இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
சிட்டி வங்கியில் 27 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உடையவர். தொடக்க நிலை பணியாளராக இணைந்து தென் கிழக்கு ஆசியா பசிபிக் பகுதிகளின் தலைமைச் செயல் அதிகாரியாக உயர்ந்தவர்.
சிங்கப்பூர் வங்கிகள் கூட்டமைப்பின் தலைவராக பணியாற்றி வருகிறார்.
சிங்கப்பூர்-இந்தியா மேம்பாட்டு கூட்டமைப்பின் (சிண்டா) அறங்காவலராக செயல்பட்டு வருகிறார்.
வாஷிங்டனில் இயங்கிவரும் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டர்நேஷனல் பைனான்ஸ் குழுவின் உறுப்பினராக இருந்து வருகிறார்.
சிஎன்பிசி நிறுவனத்தால் சிங்கப்பூரின் சிறந்த தலைமைச் செயல் அதிகாரியாக 2013-ம் ஆண்டு குறிப்பிடப்பட்டவர்.
டெல்லியின் புனித ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பொருளாதார பட்டமும், அகமதாபாத் ஐஐஎம்மில் மேலாண்மைப் பட்டமும் பெற்றவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT