Published : 30 Apr 2018 09:19 AM
Last Updated : 30 Apr 2018 09:19 AM

65 சதவீத பொதுபங்கு வெளியீடுகளால் முதலீட்டாளர்களுக்கு லாபம்

கடந்த நிதி ஆண்டில் வெளியான பொதுப்பங்கு வெளியீடுகள் (ஐபிஓ) 65 சதவீதம் அளவுக்கு முதலீட்டாளர்களுக்கு லாபத்தை வழங்கி இருக்கின்றன. கடந்த நிதி ஆண்டில் 41 நிறுவனங்களின் ஐபிஓ வெளியானது. இதில் 27 நிறுவன பங்குகள் வெளியீட்டு விலையை விட அதிக விலைக்கு வர்த்தகமாகின்றன. மீதமுள்ள 14 நிறுவனங்கள் முதலீட்டாளர்களின் கவனத்தை பெறாமல் வெளியீட்டு விலையை விட குறைந்த விலையிலே வர்த்தகமாகின்றன.

இந்த 27 பங்குகளில் ஒரு சதவீதம் முதல் 325 சதவீதம் வரை லாபம் கிடைத்திருக்கின்றன. இதில் ஆறு பங்குகள் வெளியீட்டு விலையை விட 100 சதவீதத்துக்கு மேல் (ஏப்ரல் 27-ம் தேதி நிலவரப்படி) வர்த்தகமாகிறது. சங்கரா பில்டிங் புராடக்ட்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. தற்போது 325 சதவீதம் அளவுக்கு அதிகபட்சமாக உயர்ந்திருக்கிறது. தவிர அபெக்ஸ் புரோசன் பூட்ஸ், சலசர் டெக்னோ இன்ஜினீயரிங், ஆஸ்ட்ரான் பேப்பர், ஆர்எஸ்பி புராஜக்ட்ஸ் மற்றும் ஏயூ ஸ்மால் பைனான்ஸ் பேங்க் ஆகிய பங்குகள் 100 சதவீதத்துக்கு மேல் உயர்ந்திருக்கின்றன. மாறாக 14 நிறுவன பங்குகள் வெளியீட்டு விலையை விட குறைந்த விலைக்கே வர்த்தகமாகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x