Published : 09 Apr 2018 08:38 AM
Last Updated : 09 Apr 2018 08:38 AM
வாராக்கடன் அதிகரித்துவரும் சூழலில் 40-க்கும் மேற்பட்ட ஆடிட்டர்கள் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நிறுவனர்களுக்கு தவறான ஆலோசனைகள் வழங்கி, முறையற்ற வகையில் செயல்பட்டதால் பல கடன் கணக்குகள், வாராக்கடனாகி இருக்க கூடும் என ரிசர்வ் வங்கி சந்தேகிக்கிறது. திவால் நடைமுறையில் ரூ.4.5 லட்சம் கோடி வாராக்கடன்கள் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. வங்கித்துறையில் மோசடிகள் அதிகரித்துவரும் சூழலில், ஆடிட்டர்களின் பங்கு குறித்த விசாரணையை ரிசர்வ் வங்கி தொடங்கி இருப்பதாக தெரிகிறது. இருப்பினும் இதுகுறித்து ஐசிஏஐ முறையாக அறிக்கை ஏதும் வெளியிடவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT