Published : 06 Apr 2018 08:47 AM
Last Updated : 06 Apr 2018 08:47 AM

ஆர்பிஐ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

வங்கிக் கடனுக்கான வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. அடுத்த இரு மாதங்களுக்கு தற்போதைய வட்டி விகிதத்தை தொடர்வதென ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் தலைமையில் கூடிய நிதிக் கொள்கை குழுவின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரெபோ விகிதம் 6 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெபோ விகிதம் 5.75 சதவீதமாகவும் நீடிக்கிறது. ரொக்கக் கையிருப்பு விகிதம் (சிஆர்ஆர்) 4 சதவீதமாகவும், எஸ்எல்ஆர் விகிதம் 19.5 சதவீதமாகவும் உள்ளது. ஆறு உறுப்பினர்களில் ஐந்து பேர் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யத் தேவையில்லை என ஒப்புக்கொண்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது 2018-19 நிதியாண்டின் முதல் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x