Published : 06 Apr 2018 08:47 AM
Last Updated : 06 Apr 2018 08:47 AM
வங்கிக் கடனுக்கான வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. அடுத்த இரு மாதங்களுக்கு தற்போதைய வட்டி விகிதத்தை தொடர்வதென ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் தலைமையில் கூடிய நிதிக் கொள்கை குழுவின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரெபோ விகிதம் 6 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெபோ விகிதம் 5.75 சதவீதமாகவும் நீடிக்கிறது. ரொக்கக் கையிருப்பு விகிதம் (சிஆர்ஆர்) 4 சதவீதமாகவும், எஸ்எல்ஆர் விகிதம் 19.5 சதவீதமாகவும் உள்ளது. ஆறு உறுப்பினர்களில் ஐந்து பேர் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யத் தேவையில்லை என ஒப்புக்கொண்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது 2018-19 நிதியாண்டின் முதல் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT