Published : 03 Mar 2018 09:30 AM
Last Updated : 03 Mar 2018 09:30 AM
இறக்குமதி வரி விதிப்பை அதிகரிக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முடிவால் இந்தியாவில் உடனடி தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லையென்று இந்திய உருக்குத் துறைச் செயலர் அருணா ஷர்மா தெரிவித்துள்ளார்.
எஃகு மற்றும் அலுமினியப் பொருட்கள் மீது அதிகபட்ச இறக்குமதி வரி விதிக்கப்போவதாக கடந்த வியாழனன்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருக்கும் நிலையில் அருணா ஷர்மா இவ்வாறு தெரிவித்துள்ளார். அமெரிக்க உற்பத்தியாளர்களை, முக்கிய வர்த்தக கூட்டாளிகளான சீனா, ஐரோ ப்பா மற்றும் கனடா உற்பத்தியாளர்களிடமிருந்து காப்பாற்ற இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா 2 % மட்டுமே அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதால் இந்த வரி உயர்வு மூலம் உடனடி பாதிப்புகள் எதுவும் இல்லையென்று அருணா ஷர்மா கூறினார். இருப்பினும் அமெரிக்க சட்டத்தின் 232-வது பிரிவு சில தடைகளை ஏற்படுத்தலாம் என்றார். 1962-ம் ஆண்டின் வர்த் தக விரிவாக்க சட்டத்தின் 232(பி) பிரிவு குறிப்பிட்ட சில இறக்குமதிப் பொருட்கள் தேசியப் பாதுகாப்புக்கு எதிரானதா என விசாரணை செய்யும் உரிமையை அமெரிக்காவுக்கு வழங்குகிறது.
எஃகு பொருட்கள் மீது 25% வரியும், அலுமினியப் பொரு ட்கள் மீது 15% வரியும் அடுத்த வாரம் முதல் விதிக்கப்பட இருப்பதாக ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து அமெரிக்க உள்நாட்டு எஃகு மற்றும் அலுமினியப் பங்குகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.
அமெரிக்காவின் இந்த நடவடி க்கைக்கு பதிலடி கொடுக்க பிற நாடுகள் தயாராகி வருவதால் வர்த்தகப் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. - ராய்ட்டர்ஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT