Published : 11 Feb 2018 09:03 AM
Last Updated : 11 Feb 2018 09:03 AM
இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஓஎன்ஜிசிக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த அபுதாபி நேஷனல் ஆயில் ஆஃப்ஷோர் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்மூலம் அபுதாபி நேஷனல் ஆயில் ஆஃப்ஷோரின் பத்து சதவீதப் பங்குகள்வரை ஓஎன்ஜிசி கைப்பற்றும் எனத் தெரிகிறது. இதன் மதிப்பு 60 கோடி டாலர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. கூட்டுறவுக்கான வழிகளை அதிகரிப்போம் என அபுதாபி நேஷனல் ஆயில் ஆஃப்ஷோர் கடந்த ஆகஸ்டில் அறிவித்திருந்த நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அபுதாபி நேஷனல் ஆயில் ஆஃப்ஷோரில் பங்குகளை வாங்கும் முதல் நிறுவனம் ஓஎன்ஜிசி என்பது குறிப்பிடத்தக்கது. ஒஎன்ஜிசி அயலக முதலீட்டுப் பிரிவான ஒஎன்ஜிசி விதேஷின் நிர்வாக இயக்குநர் என்கே வர்மா இப்போது அபுதாபியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT