Published : 05 Feb 2018 12:36 PM
Last Updated : 05 Feb 2018 12:36 PM
ரயில்வே துறை பணிகளில் 26 ஆயிரம் பேரை தேர்வு செயற்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரயில்வே உதவி ஓட்டுநர், தொழில்நுட்ப பணியாள்கள் என பல்வேறு பிரிவுகளில் 26,000 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை ரயில்வ தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதன்படி, பத்தாம் வகுப்பு, ஐடி, பொறியியல், டிப்ளமோ உள்ளிட்ட கல்வித் தகுதி உடைய 18 வயது முதல் 30 வயதுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க, மார்ச் 5-ம் தேதி கடைசி நாள் ஆகும்.
இடஒதுக்கீடு பிரிவில் வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் 3 ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் 5 ஆண்டுகளும் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
கணிணி சார்ந்த இருநிலையில் தேர்வுகளும், சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட அடுதடுத்த கட்ட தேர்வு முறைப்படி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு அறிவிப்பும் ரயில்வே தேர்வு வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT