Published : 01 Feb 2018 03:22 PM
Last Updated : 01 Feb 2018 03:22 PM
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு பெண்கள் சம்பளத்தில் இருந்து செலுத்தும் தொகை 12 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைக்கப்பட்டுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த சலுகை இந்த அறிவிப்பு அமலுக்கு வந்தபின் புதிதாக பணியில் சேரும் பெண்களுக்கே இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை இன்று (வியாழன்) தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பெண்கள் பயன்பெறும் வகையில் சில அறிவிகப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு பெண்கள் சம்பளத்தில் இருந்து செலுத்தும் தொகை 12 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது பெண்கள், ஆண்கள் என அனைவருமே 12 சதவீதம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் சேமிக்க வேண்டும். இதில் பெண்களுக்கான பங்களிப்பு தொகை 8 சதவீதமாக பட்ஜெட்டில் குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பணி வழங்கும் நிறுவனங்கள் தற்போது செலுத்தும் பங்கு தொகையில் எந்த மாற்றமும் இருக்காது.
இதன் மூலம் பெண்கள் தங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சம்பளத்தின் அளவு தற்போதை உள்ளதை விடவும் இனிமேல் சற்று கூடுதலாக இருக்கும். எனினும் புதிதாக பணியில் சேரும் பெண்களுக்கே இந்த திட்டம் பொருந்தும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT