Published : 01 Feb 2018 02:31 PM
Last Updated : 01 Feb 2018 02:31 PM
உள்நாட்டு உற்பத்தியையும், வேலைவாய்ப்பையும் ஊக்கப்படுத்தும் நோக்கில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எல்இடி, எல்சிடி டிவி பேனல்கள், உதிரிபாகங்களின் சுங்க வரி இரு மடங்காக பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே 7.5 சதவீதம் இருந்த சங்கவரி இப்போது 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எல்சிடி, எல்இடி, ஓஎல்இடி டிவிக்களின் பாகங்கள் இனி விலை உயரும். இதனால், சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படும் டிவிக்கள் விலை இனி கடுமையாக உயரக்கூடும்.
மேலும், இறக்குமதி செய்யப்படும் மொபைல் போனுக்கு சுங்க வரி 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால், அதன் விலையும் இனி அதிகரிக்கும்.
இது குறித்து பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவிக்கையில், "வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மொபைல் போனுக்கான சுங்க வரி 15 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
மேலும், இறக்குமதி செய்யப்படும் எல்இடி, எல்சிடி, ஓஎல்இடி ஆகியவற்றின் பேனல்கள், உதிரிபாகங்களுக்கு இதுவரை 7.5 சதவீதம் மட்டுமே வரிவதிக்கப்பட்டு வந்தது.
உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்தும் வகையிலும், உள்நாட்டில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் வகையில், இந்த இறக்குமதி 7.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதன் மூலம், இனி வரும் நாட்களில் மொபைல் போன்கள் மற்றும் எல்சிடி, எல்இடி, ஓஎல்இடி டிவிக்களின் விலை உயரக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT