Published : 01 Feb 2018 01:42 PM
Last Updated : 01 Feb 2018 01:42 PM

பட்ஜெட் 2018-19: ஒரு கண்ணோட்டம்

2018-19-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றள்ள மிக முக்கிய அறிவிப்புகள் மட்டும் உங்கள் பார்வைக்கு:

* வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

* சம்பளதாரர்கள் மருத்துவ மற்றும் போக்குவரத்திற்கு ரூ.40,000 வரை நிரந்தர கழிவாக பெறலாம்.

* விவசாய பொருட்கள் சந்தைப்படுத்துதலுக்கு ரூ. 2,000 கோடி நிதியுதவி.

* மூத்த குடிமக்கள் வங்கி சேமிப்பு வட்டிக்கு ரூ.50,000 வரை விலக்கு பெறலாம்

* அனைத்து மூத்த குடிமக்களும், ரூ.50,000 வரை மருத்துவ இன்சூரன்ஸ்களுக்கு கழிவு பெறலாம்

* மிக மோசமான நோய் பாதிப்புகளுக்கு ரூ.1 லட்சம் வரை விலக்கு பெறலாம்

* சவுபாக்யா யோஜனா திட்டத்தின் கீழ் 4 கோடி வீடுகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்படும்

* உஜ்வாலா திட்டத்தின் கீழ் 8 கோடி ஏழை பெண்களுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்படும்

* அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும்

* சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு உற்பத்தி செலவு மானியம் 1.5 மடங்கு அதிகரிக்கப்படும்

* அனைத்து துறைகளிலும் 12% புதிய ஊழியர்கள் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* தேசிய அளவில் புதிய உடல்நல பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படும். இதன்படி 5 லட்சம் ரூபாய்க்கான குடும்ப மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.

* ரயில்வ திட்டங்களுக்கு  ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

* அரசு நிறுவனங்களின் பங்குகளை விலக்கிக் கொள்வதன் மூலம் 80,000 கோடி ரூபாய் நிதி திரட்டப்படும்

* குடியரசு தலைவரின் சம்பளம் ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப எம்.பி.க்களின் சம்பளம் உயர்த்தப்படும்.

* நாட்டில் வளர்ச்சி விகிதம் அடுத்த நிதி ஆண்டில் 8 சதவீதமாக இருக்கும்.

* உலகின் 5-வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா விளங்கும்.

* பிரதமர் மோடி தலைமையிலான அரசு, பதவி ஏற்றது முதல் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக அந்நிய முதலீடு கணிசமாக உயர்ந்துள்ளது.

* நடப்பு நிதிநிலை ஆண்டில் இரண்டாவது அரையாண்டில் வளர்ச்சி விகிதம் 7.2- 7.5 சதவீதத்தை எட்டும்.

* அரசியல் லாபத்தைக் கருத்தில் கொள்ளாமல் சீர்திருத்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கிறது.

* வேளாண்மை உற்பத்தி முன்பு எப்போதும் இல்லாத அளவு உயர்ந்துள்ளது.

* அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு.

* வரி ஏய்ப்பு குறைந்துள்ளது.

* அரசு கொள்கை முடிவு எடுப்பதில் இருந்த தேக்க நிலையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம்.

 * பிரதமர் கிராம சாலை திட்டம் வேளாண் மையங்களை இணைக்க நடவடிக்கை.

* வேளாண் கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ.22000 கோடி ஒதுக்கீடு

* இயற்கை வேளாண்மையை பெருமளவில் ஊக்குவிக்க நடவடிக்கை

* விவசாயிகள் கடன் அட்டைத்திட்டம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத்துறைக்கும் விரிவாக்கம்.

* உணவு பதப்படுத்துதல் துறைக்கான ஒதுக்கீடு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

* 42 வேளாண் பூங்காக்கள் அமைக்கப்படும்.

*  அடுத்த நிதி ஆண்டிற்குள் கூடுதலாக 2 கோடி கழிப்பறைகள் கட்டப்படும்.

*  ஊரக சாலைத்திட்டத்தின் கீழ் 3 கோடியே 21 லட்சம் ஊரக வேலை வாய்ப்பு.

*  ஆசிரியர் பயிற்சியில் ஒருங்கிணைந்த பி.எட் பயிற்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

* கல்வித்துறைக்கு ரூ 1லட்சம் கோடி முதலீடு. நவோதையா பள்ளிகள் அடிப்படையில் புதிய ஏகலைவன் பள்ளிகள்.

*  3 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஒரு அரசு மருத்துவக்கல்லூரி வீதம் ஏற்படுத்தப்படும்.

*  24 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும்.

*  ஷெட்யூல்டு வகுப்பு மற்றும் பழங்குடியினருக்கான ஒதுக்கீடு 50 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கீடு.

*   சமூக நலத்திட்டங்கள், சுகாதாரம் மற்றும் கல்விக்கு 1.35 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு .

*   கங்கையை தூய்மைப்படுத்த 187 புதிய திட்டங்கள் .

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x