Published : 01 Feb 2018 12:09 PM
Last Updated : 01 Feb 2018 12:09 PM

காசநோயாளிகளுக்கு மாதம் ரூ.500 உதவித் தொகை: நாடு முழுவதும் 24 புதிய மருத்துவக் கல்லூரிகள்

2018-19ம் நிதி காசநோயாளிகளுக்காக மாதம் ரூ.500 உதவித் தொகை ஒதுக்கப்படும், 24 புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார்.

2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசி வருகிறார்.. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்.

1. காச நோயாளிகளுக்காக ரூ.600 கோடி ஒதுக்கீடு

2. ஒவ்வொரு 3 தொகுதிகளுக்கும் ஒரு மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும்.

3. நாடுமுழுவதும் 24 புதிய மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும்.

4. ரூ.1200 கோடியில் சுகாதார மையங்கள் அமைக்கப்படும். இதன் மூலம் 50 கோடி மக்கள் பயன் அடைவார்கள்.

5. காசநோயாளிகளுக்கு மாதம் ரூ.500 உதவித்தொகை

6. ரூ.50 ஆயிரம் கோடியில் உடல்நலக் காப்பீடு திட்டம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x