Published : 01 Feb 2018 09:43 AM
Last Updated : 01 Feb 2018 09:43 AM

பட்ஜெட் தாக்கல் செய்ய நிதியமைச்சக அலுவலகம் வந்து சேர்ந்தார் அருண் ஜேட்லி

2018-19-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்றத்தின் வடக்கு பிளாக்கில் உள்ள நிதியமைச்சக அலுவலகத்துக்கு நிதியமைச்சர் அருண் ஜேட்லி வந்தடைந்தார்.

பட்ஜெட் அறிவிப்புகள் அடங்கிய பெட்டியுடன் நிதியமைச்சக அலுவலக வாசலில் அவர் நிதியமைச்சக ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு, அருண் ஜேட்லி தாக்கல் செய்யும் 5-வது பட்ஜெட் இதுவாகும்.

மேலும் இந்த அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு அளவிலான பட்ஜெட் இதுவாகும். 2019-ம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தல் நடக்க இருப்பதால், அடுத்தாண்டு இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x