Published : 01 Feb 2018 09:07 AM
Last Updated : 01 Feb 2018 09:07 AM
முருகப்பா குழுமத்தின் அங்கமான இஐடி பாரி நிறுவனம் கொச்சினைச் சேர்ந்த சிந்தைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய ஆலையை அமைக்க உள்ளது.
கடற்பாசியிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட ஆலையை தமிழகத்தில் இரு நிறுவனங்களும் இணைந்து அமைக்க உள்ளன. மொத்தம் 40 கோடி ரூபாய் முதலீட்டிலான இந்த ஆலையில் பைகோசியானின் தயாரிக்கப் படும். இது கடற்பாசியிலிருந்து இயற்கையாக ஊதா நிற நிறமி தயாரிக்கும் ஆலையாகத் திகழும். இந்த ஆலையில் இஐடி பாரி நிறுவனம் ரூ. 11 கோடியை முதலீடு செய்ய உள்ளது.
கடற்பாசி தயாரிப்பில் பாரி நியூட்ராசிடிகல்ஸ் முன்னணியில் திகழ்கிறது. முதல் கட்டமாக இந்த ஆலையில் பைகோசியானின் தயாரிக்கப்படும். பிறகு மற்ற பொருள்களைத் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாரி நியூட்ராசிடிகல்ஸ் வர்த்தகப் பிரிவுத் தலைவர் முத்து முருகப்பன் தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர்களுக்கு உயர் தரத்தில் பைகோசியானின் தொடர்ந்து கிடைக்க வழி ஏற்படும் என்று சிந்தைட் இண்டஸ்ட்ரீஸ் இயக்குநர் அஜூ ஜேகப் தெரிவித்துள்ளார். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT