Published : 06 Jan 2018 10:02 AM
Last Updated : 06 Jan 2018 10:02 AM
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 32 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது.
2015-ம் ஆண்டு ஏப்ரலில் இருந்த நிலைக்கு ரூபாய் மதிப்பு வர்த்தமாகிறது. நேற்றைய வர்த்தகத்தின் இடையே ரூபாய் மதிப்பு அதிகபட்சமாக 63.31 ரூபாயாக உயர்ந்தது. கடந்த நவம்பரில் இருந்து ரூபாய் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இரு மாதங்களில் 200 பைசா அளவுக்கு உயர்ந்திருக்கிறது. ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகளிடம் அமெரிக்கா டாலரை விற்கும் போக்கு அதிகமாக இருப்பதால் டாலர் மதிப்பு குறைந்து ரூபாய் மதிப்பு உயர்ந்து வருகிறது. இந்திய கரன்ஸி மட்டுமல்லாமல் ஆசியாவின் முக்கிய கரன்ஸிகளும் உயர்ந்து வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT