Published : 06 Jan 2018 10:02 AM
Last Updated : 06 Jan 2018 10:02 AM

ஆர்காம் மீதான திவால் மனுவை திரும்ப பெற்றது சீன மேம்பாட்டு வங்கி

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் (ஆர்காம்) நிறுவனம் மீதான திவால் மனுவை சீன மேம்பாட்டு வங்கி (சிபிடி) திரும்ப பெற்றுள்ளது.

அனில் அம்பானியின் ஆர் காம் நிறுவனத்துக்கு சிபிடி அதிக கடன் வழங்கியிருந்தது. இந்தக் கடன் தொகை நிலுவையில் இருந்ததால் ஆர் காம் நிறுவனத்தின் மீது தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்திடம் திவால் மனுவை அளித்தது. தற்போது ஆர் காம் நிறுவனத்தின் மீதான இந்த மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக சிபிடி வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஆர் காம் நிறுவனத்தின் சொத்துகளை ஜியோ நிறுவனம் வாங்குவதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டதன் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக சிபிடி தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x