Published : 23 Oct 2014 02:28 PM
Last Updated : 23 Oct 2014 02:28 PM

வேளாண் சந்தை

# திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த சி.கரிகாலன், காட்டுயானம், சிகப்பு அரிசி, மிளகு சம்பா, செம்புளி சம்பா, குழியடிச்சான் மற்றும் கருத்தகார் போன்ற பாரம்பரிய நெல் வகைகளின் விதைகள் தன்னிடம் விற்பனைக்காக உள்ளதாகவும், இந்த விதை நெல் ரகங்கள் வேண்டுவோர் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கிறார். அவரது தொடர்பு எண்: 81224 70102.

# விவசாயிகள் உற்பத்தி செய்யும் கம்பு, சோளம் போன்ற சிறுதானிய விளைபொருட்களை இருதரப்புக்கும் கட்டுப்பாடியான நியாயமான விலையில் வாங்கிக் கொள்ள தயாராக இருப்பதாக கரூர் வடக்கு காந்திகிராமத்தில் உள்ள தமிழ்நாடு மானாவாரி விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வெ.வாசுதேவன் தெரிவிக்கிறார்.

கொள்முதல் செய்த விளைபொருட்களை மதிப்புக் கூட்டி, இருப்பு வைத்து, சந்தைப் படுத்துவதன் மூலம் கிடைக்கும் லாபத்தின் ஈவுத் தொகையை விவசாயிகளுக்கு பிரித்து அளிக்கிறோம் என அவர் கூறுகிறார். தொடர்புக்கு: 97903 14533.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x